தேநீர்ப் பொழுதுகள்!கவிஞர் இரா. இரவி

tea coffee tamil deepam

தேநீர்ப் பொழுதுகள் தெம்பு தருபவை
தளர்ச்சி நீக்கி சுறுசுறுப்பு வழங்குபவை!

தாகம் தணிக்கும் தவிப்பை நீக்கும்
தரமாக இருந்தால் மனம் மகிழும்!

விழாக்களிலும் தேநீர்ப் பொழுதுகள் உண்டு
விசாரணைகள் அப்பொழுதுகளில் நடப்பது உண்டு!

அறியாத முகங்கள் அறிமுகம் நடக்கும்
அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு வரும்!

உலக அரசியலும் பேசுவது உண்டு
உள்ளூர் அரசியலும் பேசுவது உண்டு!

பிந்தியவர்களுக்கு கிடைக்காமல் போவதும் உண்டு
முந்தியவர்கள் பருகி மகிழ்வது உண்டு!

இருக்கையிலிருந்து எழுந்து நடக்க வாய்ப்பு
இறுக்கம் தளர்த்தி இளைப்பார விடுதலை கிட்டும்!

தேநீருக்கு முன் ரொட்டிகளும் தருவது உண்டு
தேநீரில் முக்கி ரொட்டி உண்பதும் உண்டு!

பேசியவர் பற்றிய விமர்சனம் நடப்பதுண்டு
பேசியவர் கேட்டு நொந்து விடுவதுண்டு!

சோர்வை நீக்கி புதுப்பிக்க உதவும்
சோம்பல் முறித்து புத்துணர்வு பெறலாம்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்பு
தேமதுரத் தேநீராய் உருவானது மகிழ்வு!

நல்ல தேயிலைகள் ஏற்றுமதி ஆகின்றன
குப்பைத் தேயிலைகள் நமக்கு வருகின்றன!

அயல்நாட்டான் குடிக்கும் அற்புத தேநீர்
அனைவருக்கும் நமக்கும் கிட்டும் நாள் திருநாள்! 

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version