இன்குலாப் ! கவிஞர் இரா .இரவி ! 

Inkulab tamil deepam

அதிகம் படைக்கவில்லை என்றாலும் 
அழுத்தமாகப் படைத்தவன் 
இன்குலாப் ! 

யார் கவிஞன் என்றால் 
நீயே கவிஞன் என்றானவன் 
இன்குலாப் ! 

பாரதி போலவே 
எழுதியது போல வாழ்ந்தவன் 
இன்குலாப் ! 

அஞ்சாமையின் குறியீடு நீ 
சமரசம் செய்யாத கொள்கையாளன் நீ 
இன்குலாப் ! 

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலில் 
என்றும் ஒலிக்கும் உன்கவிதைகள் 
இன்குலாப் ! 

மறைவு உன் உடலுக்குத்தான் 
மறைவு இல்லை உன் கவிதைகளுக்கு 
இன்குலாப் ! 

ஈழத்தமிழருக்காக மனிதாபிமானக் 
கவிதைகள் யாத்தவன் 
இன்குலாப் ! 

ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் 
அதனை கவிதை வடிவில் எதிர்த்தவன் 
இன்குலாப் ! 

யாருக்கும் துதி பாடாதவன் நீ 
அதனால் உன் துதி பாடுகின்றேன் 
இன்குலாப்!

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version