மரம் !அறம்! கவிஞர் இரா.இரவி!

kavithai tree tamil deepam

கெட்ட காற்றை
உள்வாங்கி
நல்ல காற்றை
வெளியிடும் மரம்

நல்ல காற்றை
உள்வாங்கி
கெட்டகாற்றை
வெளியிடுபவன்
மனிதன்

கழிவுநீரை
உள்வாங்கி
நல்ல இளநீர்
தருவது மரம்

நல்ல நீரை அருந்தி
கழிவு நீரை
கழிப்பவன் மனிதன்

உயர்ந்தவன்
தாழ்ந்தவன்
பாகுபாடின்றி
உயர்ந்த
நிழல் தருவது மரம்

உயர்ந்தவன்,
தாழ்ந்தவன்
பாகுபாட்டுடன்
உதிரம் சிந்துபவன்
மனிதன்

மரமெனநிற்காதே என
மனிதரைத் திட்டி
மரத்தை அவமதிக்காதே!
மானிடனே
இப்போது சொல்
மரம் பெரிதா?
நீ பெரிதா?

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version