ஓராயிரம் பொருள் கிடைக்கும் – ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி.

tamil deepam selaimpu

ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு

மேடுகளைத் தகர்த்து
பள்ளம் நிரப்பு சமத்துவம்
பொதுவுடமை

விழி இரண்டு போதாது
வனப்பை ரசிக்க
வண்ண மலர்கள்

ஒய்வதில்லை
விண்ணும் மண்ணும் அலையும்
ஒய்ந்திடும் மனிதன்

வெட்ட வெட்ட
வளரும் பனைமரம்
பாராட்ட வளரும் குழந்தை

குடியால் கோடிகள் திரட்டி
கோடித் துணி தந்தனர்
ஏழைகளுக்கு

புதிய பொருளாதாரம்
கல்வி தனியார் மயம்
மது அரசுமயம்

உருவமின்றியும்
தேசப்படுத்தியது வாழையை
காற்று

அன்றே அநீதி
ஆண்களுக்கு கை சிலம்பு
பெண்களுக்கு கால் சிலம்பு

இருப்புப் பாதையில்
இருப்பின்றி பயணம்
தொடர் பயணம்

கழிவுநீர் உறிஞ்சி
இளநீர் தரும்
உயர்ந்த தென்னை

யார் உயர் திணை
மோதி விழும் மனிதன்
கூடி வாழும் பறவைகள்

விளைவித்தன கேடு
கண்ணிற்கும் மனதிற்கும்
தொல்(ல்) லைக்காட்சிகள்

தரம் தாழ்ந்தால்
களையாகும்
கலை

மாடு செரிப்பதற்கும்
மனிதன் மகிழ்வதற்கும்
உதவிடும் அசைபோடுதல்

போராட்டம் நடிப்பு அரசியலில்
பேராட்டமே வாழ்க்கை
ஏழைகளுக்கு

கண்ணிற்கு குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
இயற்கை

மனம் வருந்துவதில்லை
மங்கையர் சூடாததற்கு
எருக்கம் பூக்கள்


மற்ற கவிதைகள்

புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி

அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான் ! கவிஞர் இரா .இரவி

வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி

இலக்கிய இமயம் மு .வரதராசனார் கவிஞர் இரா .இரவி

பேசும் மெளனம்: கவிஞர் இரா .இரவி.

வறுமை கொடிது ! கவிஞர் இரா .இரவி

சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி

சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி

மாமதுரை போற்றுவோம் ! மாமதுரை போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி !

தலையெழுத்து ! கவிஞர் இரா .இரவி !

சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !

கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !

என் இனிய பகைவனுக்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

சும்மா இருக்கவில்லை நாங்கள் ! கவிஞர் இரா .இரவி !

வீரமங்கை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி
கவிஞர் இரா.இரவி 

Exit mobile version