இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் !கவிஞர் இரா .இரவி

tamil deepam Ravi poems

இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார்

வளமை மிக்க தமிழுக்காக உழைத்த தமிழ் உண்மை
வாய்மை மேடு ஊரில் பிறந்த தமிழ் வாய்மை

சிங்காரவேலரின் ம்கனாகப் பிறந்த தமிழ்ச்சிங்காரம்
இரத்தினம் அமையார் பெற்றெடுத்த தமிழ் இரத்தினம்

திருக்குறளை நேசித்து ஒப்பற்ற உரை எழுதியவர்
திருவள்ளுவரையே மகனாகப் பெற்றவர்

அறிஞர் அண்ணா பிறந்த ஆண்டில் பிறந்த தமிழ் அறிஞர்
அறிஞர் அண்ணாவின் பாராட்டைப் பெற்றத் தமிழ் அறிஞர்

உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி
உயர்ந்த உசுமானியப் பல்கலைக் கழகம் வரை உயர்ந்தவர்

கவிஞர் கட்டுரையாளர் எழுத்தாளர் பன்முக ஆற்றலாளர்
கற்கண்டுத் தமிழுக்கு இனிமை சேர்த்த இனியவர்

தமிழுக்காக சிறை சென்ற மாவீரர்
தமிழுக்காகவே வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர்

தன்னலம் மறந்து தமிழ் நலம் காத்தவர்
தமிழுக்காகவே வாழ்க்கையை ஈந்தவர்

தன் சொந்த சொத்துக்களை தமிழுக்காக விற்றவர்
தன் சொந்த மொழியான தமிழை சொத்தாக மதித்தவர்

ஆதிக்க இந்தியை எதிர்த்த கொள்கைக் குன்று
அழகு தமிழின் புகழை அகிலம் பரப்பியவர்

பாவாணர் பாராட்டிய பண்பாளர் இலக்குவனார்
பார் புகழும் தமிழுக்குப் புகழ் பல சேர்த்தவர்

இலக்குவனாரை பாராட்டாத தமிழ் அறிஞர் இல்லை
இலக்குவனாரை பாராட்டாதவர் தமிழ் அறிஞரே இல்லை.

நன்றி 
கவிஞர் இரா.இரவி 
Exit mobile version