என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி !

thesam tamil deepam

உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது
உணவிலிருந்து உடை வரை அந்நியமானது

இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று

வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று
வியாபாரம்என்று வந்து ஆள்கின்றனர் இன்று

விதை நெல்கள் காணமல் போனது
விதைகள் அயல்நாட்டான் முடிவானது

இயற்கை விவசாயம் அழிந்து விட்டது
செயற்கை உரங்கள் பெருகி விட்டது

பூச்சி மருந்துகள் மனிதனையும் கொல்கின்றது
பூச்சிகள் பல புதிது புதிதாக உருவானது

உலகமயம் என்ற பெயரில் வந்தனர்
உலை வைத்தனர் உள்ளூர் தொழில்களுக்கு

தாராளமயம் என்ற பெயரில் வந்தனர்
தாராளக் கொள்ளை அடிக்கின்றனர்

புதிய பொருளாதாரம் என்ற பெயரில்
புதுப்புது கொள்ளை அடிக்கின்றனர்

ஆயுத வியாபாரம் செய்து நம்மிடமிருந்து
அள்ளிச் செல்கிறான் கோடிகளை சிலர்

அணு உலைகளை தலையில் கட்டி
ஆபத்தில் ஆழ்த்தி கோடிகள் பெறுகிறான்

திறந்த வீட்டில் நாய்கள் நுழைந்த கதையாய்
தேசத்தின் உள்ளே பன்னாட்டுக் கொள்ளையர்கள்

என் தேசம் !என் சுவாசம் ! என்று உணர்வோம்
இனியாவது விழிப்போம் கொள்ளையரை விரட்டுவோம்!

நன்றி 
கவிஞர் இரா.இரவி 
Exit mobile version