திருக்குறள் கவிஞர் இரா .இரவி

tamildeepam Ravi

வேதங்களை விட
உயர்வானது
திருக்குறள்

சாஸ்திரங்களை விட
மேன்மையானது

திருக்குறள்

துன்ப இருள் அகற்றும்
இன்ப ஒளி ஏற்றும்
திருக்குறள்

அறிவுப் போதிக்கும்
அற்புத ஆசான்
திருக்குறள்

வெறிப் பிடித்தவரையும்
படித்தால் நெறிப்படுத்தும்
திருக்குறள்

இலக்கியங்களின் இமயம்
இனிய கருத்துக்களின் சுரங்கம்
திருக்குறள்

டால்ஷ்டாய் காந்தியடிகள் நேசித்தது
குன்றக்குடி அடிகளார் பூசித்தது
திருக்குறள்

முக்காலமும் பொருந்தும்
முக்கனி
திருக்குறள்

ஈராயிரம் வயது கடந்தும்
இன்னும் இளமையாக
திருக்குறள்

வாழ்வியல் நெறி
வாசிப்பவருக்கு கற்பிக்கும்
திருக்குறள்

காலத்தால் அழியாத
கல்வெட்டு இலக்கியம்
திருக்குறள்

ஒன்றே முக்கால் அடிகளில்
உலகம் அளந்த
திருக்குறள்

ஈடு இணையற்ற
இனிய நூல்
திருக்குறள்

தமிழர்களின் வாழ்வில் நின்று
தமிழர்களின் பெருமையில் ஒன்றானது
திருக்குறள்

அகிலம் முழுவதும்
அறியப்பட்ட நூல்
திருக்குறள்

அறிஞர்கள் பலர்
உருவாகக் காரணம்
திருக்குறள்

நன்றி
கவிஞர் இரா இரவி
Exit mobile version