இரட்டையர்! கவிஞர் இரா. இரவி

twins life kavithai tamil deepam

நன்மை தீமை இரண்டும் உண்டு
நான் என்று அவனை நினைப்பதுண்டு!

அவன் என்று என்னை நினைப்பதுண்டு
அவள் என்று என்னை நினைப்பதுண்டு!

உடையால் வேறுபாடு காட்டினாலும்
உடன் புரியாது நாங்கள் யார் என்று!

அச்சு அசலாக இருவரும் இருப்பதால்
அனைவருக்குமே குழப்பம் வருவது இயல்பு!

எங்களை வளர்த்து எடுக்கும் முன்
எங்கள் அன்னை படும்பாடு அரும்பாடு!

மூத்தவர் இளையவர் வேறுபாடு என்பது
முந்தி வந்த சில நொடிகள் மட்டுமே!

அண்ணன் தம்பி அக்காள் தங்கை என்பது
அடுத்தடுத்து பிறந்து இன்ப அதிர்ச்சி தந்தவர்கள்!

பிறப்பில் தொடங்கி இறப்பு வரை
பார்ப்பவர்கள் அனைவரும் பரவசம் அடைவர்!

ஆயிரத்தில் இருவராக பிறந்தவர் நாங்கள்
அடையாளம் காண முடியாத புதிர் நாங்கள்!

வளர்த்து எடுக்க பெற்றோருக்கு சிரமம் உண்டு
வளர்ந்த பின்னும் சிரமம் தொடர்வதுண்டு!

எங்களுக்குள் உருவ ஒற்றுமை உண்டு
எங்களுக்கும் மன வேற்றுமை உண்டு!

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version