புதுக்கோட்டை: புதிய மணல் குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிக்காது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக, முதல் கட்டமாக 25 இடங்களில், மணல் குவாரிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அது குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் மெய்யநாதன் இவ்வாறாகக் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று (மே 9) செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: "தமிழகத்தில் 25 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த இடத்திலும் சுற்றுச்சூழல் பாதிக்காது. மக்களின் தேவை அடிப்படையில் புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து மணல் குவாரிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
![](https://tamildeepam.com/wp-content/uploads/2020/05/tamildeepam-flex-logo.png)
Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982