குறும்பா.ஹைக்கூ
இயற்கை எழுதிய கவிதையில்
எழுத்துப்பிழைகள்
திருநங்கைகள்
உணர்த்தியது
பசியின் கொடுமை
நோன்பு
வக்கிரம் வளர்க்கும்
வஞ்சனைத் தொடர்கள்
தொலைக்காட்சிகளில்
அன்று இலங்கை கொடூரனுக்கு
இன்று இந்திய வில்லிக்கு
புற்றுநோய்
ஆணி அடித்து
ரணப்படுத்தி விளம்பரம்
சாலையோர மரங்களில்
படமே இல்லை
உதவியது விளம்பரம்
முன்னாள் நடிகைக்கு
புகைப் பிடிக்கின்றதோ ?
மலை
வான் மேகம்
கண்ணால்
காண்பதும் பொய்
மலையை முத்தமிடும் வானம்
ஒழித்து விடு
பொன்னாசை பட்டாசை
நிரந்தரம் நிம்மதி
விரயமாவதைப் பயன்படுத்திடு
விவேகமாக வளரந்திடு
சூரிய சக்தி
நன்றி கவிஞர் இரா.இரவி
![](https://tamildeepam.com/wp-content/uploads/2020/05/tamildeepam-flex-logo.png)