சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே! கவிஞர் இரா. இரவி !
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்று
சொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் !
உலகின் முதல் மொழி தமிழ் என்று
உரைப்பது தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் !
உறவுகளுக்கு என்று பலவிதமான சொற்கள்
உன்னத தமிழ் மொழியில் ஏராளம் !
அடுக்கு மொழியில் அள்ளி விட சொற்கள்
ஆயிரக்கணக்கில் அழகு தமிழில் உண்டு !
தமிழ் !தமிழ் !தமிழ் ! என்று உச்சரித்துப் பாருங்கள்
அமிழ்து ! அமிழ்து ! என்று ஒலி கேட்கும் !
முத்தமிழுக்கும் மகுடமாக விளங்குவது சொற்கள்
முக்காலமும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி !
ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு
ஒரு சொல் கூட பொருள் இன்றி இல்லை !
ஓர் எழுத்து சொல்லுக்கும் பொருள் உண்டு
இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள் உண்டு !
உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து
மூவகை எழுத்துக்களின் சுரங்கம் தமிழ் மொழி !
பிறமொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
பிறக்கும்போதே சிறப்போடு பிறந்த மொழி !
பன்மொழி அறிஞர்கள் பாராட்டும் தமிழ்மொழி
பன்னாட்டு அறிஞர்கள் போற்றிடும் தமிழ்மொழி !
உலக உயிரினங்கள் உச்சரிக்கும் அம்மா தமிழ்
உலகமே போற்றிடும் உன்னத மொழி தமிழ்மொழி !
நன்றி..
கவிஞர் இரா .இரவி