குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைந்தால் செலவு குறையும்: மயில்சாமி அண்ணாதுரை கருத்து
மதுரை: குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைந்தால் விண்கலத்தை ராக்கெட் மூலம் செலுத்துவதற்கான செலவு குறையும் என்று இஸ்ரோ மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையிலுள்ள கே.எம்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.