வாழ்வியல்கவிதைகள்சமூகம்செய்திகள்டிரெண்டிங்மற்றவைகள்

செவிலித்தாய்

வெள்ளை ஆடை வெள்ளை மனம்//

மனம் முழுவதும் மற்றவர் சேவை//

சேவையால் உயர்ந்தாய் சேய்க்கு தாயாய்//

தாயானாய் மற்றவர்கள் குழந்தைக்கு செவிலித்தாயாய்//

செவிலித்தாயாய் வந்த மேன்மை தெய்வம்//

தெய்வம் நோயால் வாழும் உயிருக்கு//

1000071134

உயிருக்கு ஊட்டினாய் அன்போடு ஔடதம்//

ஔடதமாம் உன் அன்பால் நீங்கியபிணி//

நீங்கியதுபிணி உன் அன்பால் விளைந்தமருந்தால்//

விளைந்தது அன்பெனும் மருந்தாய் உன்சேவை//

உன்சேவை நாளும் நானிலத்தில் தேவை//

தேவை அறிந்து செய்திடுவாய் சேவை//

சேவையால் உயர்ந்தாய் புவியில் செவிலித்தாயாய்//

கவிஞர் மா. கணேஷ்,
கொன்னையூர்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *