கவிதைகள்வாழ்வியல்

பொம்மை ! கவிஞர் இரா. இரவி.

குழந்தைகளின் இரண்டாம் பெற்றோர் பொம்மை
குதூகலமாக விளையாட உதவிடும் பொம்மை!

அழுகையை நிறுத்திட உதவிடும் பொம்மை
ஆதரவாக குழந்தைக்கு இருந்திடும் பொம்மை!

வாய் இருந்தால் அழுதிடும் பொம்மை
வீட்டுக்கு வீடு இருந்திடும் பொம்மை!

உடைந்தால் உடைந்திடும் மனசு குழந்தைக்கு
உற்ற நண்பனாக இருந்திடும் பொம்மை!

தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மையைக் கண்டால்
தட்டி கைதட்டி மகிழ்ந்திடும் குழந்தை!

சவ்வுமிட்டாய் வருகையில் கைதட்டும் பொம்மை
சவ்வுமிட்டாயென இனித்திடும் பொம்மையின் ஓசை!

பொம்மைக்குச் சோறு ஊட்டிடும் குழந்தை
பொம்மையோடு பேசி மகிழந்திடும் குழந்தை!

இக்காலப் பொம்மைகள் நெகிழியில் உள்ளன
அக்காலப் பொம்மைகள் ஆரோக்கியம் தந்தன!

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *