கவிதைகள்வாழ்வியல்

மகாத்மா காந்தி! கவிஞர் இரா. இரவி.

மகாத்மா காந்தி

அகிம்சை என்றால் என்னவென்று தெரியவில்லை
அகிலம் முழுவதும் வன்முறை பரவி விட்டது!

பொறுமை என்றால் என்னவென்று புரியவில்லை
பொறுமை இழந்து சினத்தில் வாழ்கின்றனர்!

எளிமையை என்றும் விரும்பினார் காந்தியடிகள்
எளிமை மறந்து ஆடம்பரத்தில் ஆடுகின்றனர்!

அரசியலில் நேர்மையைக் கடைபிடித்தார் காந்தியடிகள்
அரசியலில் நேர்மை இன்று காணாமல் போனது!

உப்புக்கு வரியா? என்று எதிர்த்தார் காந்தியடிகள்
ஒன்றும் இல்லை வரி இன்றி என்றானது இன்று!

இயந்திரமயமாதலை விரும்பவில்லை காந்தியடிகள்
இயந்திரமாகவே மனிதர்கள் இன்று மாறிவிட்டனர்!

எல்லோரும் என் சகோதரர்கள் என்றார் காந்தியடிகள்
இன்று சகோதரர்களே வெட்டிக் கொல்லும் அவல நிலை!

சாதிமத வேறுபாடு பார்க்காதீர் என்றார் காந்தியடிகள்
சாதிமத வேறுபாட்டால் வன்முறை நடக்குது இன்று!

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *