கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ

பாமரர்கள் மட்டுமல்ல
படித்தவர்களிடமும் பெருகியது
மூடநம்பிக்கை

இரண்டும் ஒழிந்தால்
வல்லரசாகும் இந்தியா
சாமியார் சாமி

கணினி யுகத்தில்
கற்கால நம்பிக்கை
பிரசன்னம் பார்த்தல்

முட்டாளை அறிவாளியாக்கும்
அறிவாளியை மேதையாக்கும்
சுற்றுலா

வாழ்க்கை முரண்பாடு
பணக்காரர்களுக்கு பசி இல்லை
ஏழைகளுக்கு பசி தொல்லை

அறிந்திடுங்கள்
சோம்பேறிகளின் உளறல்
முடியாது நடக்காது தெரியாது

சாதிக்கின்றனர்
கைகள் இல்லாமலும்
கைகள் உள்ள நீ ?

வாழ்க்கை இனிக்கும்
கொடுத்ததை மறந்திடு
பெற்றதை மறக்காதிரு

கவனம் தேவை
சிக்கல் இல்லை
சிந்தித்துப் பேசினால்

விரல்களால் தெரிந்தது
விழிகளில் உலகம்
இணையம்

கையில் வெண்ணை
நெய்யுக்கு அலைகின்றனர்
கோவில்களில் தங்கம்

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *