கவிதைகள்வாழ்வியல்

ஆதலினால் காதல் செய்வீர் ! கவிஞர் இரா .இரவி !

ஆதலினால் காதல் செய்வீர் !

காதலால் கவலை போகும் !
கல்யாணம் சிறக்கும் !

காதல் சொன்னால் புரியாது !
காதல் காதலித்தாலே புரியும் !

தென்றலால் இலைகள் அசைவது !
மொட்டுகள் மலர்களாக மலர்வது !

பூமியில் மழை பெய்வது !
விதைகள் மரமாக வளர்வது !

அருவியில் நீர் கொட்டுவது 1
எப்படி வந்தது தெரியாது !

இயற்கையாக வருவது !
அப்படித்தான் காதலும் !

ஆணுக்கும் பெண்ணுக்கும்
அவசியம் காதல் வரும் !

ஒருதலைக் காதலாவது
ஒரு முறையேனும் வந்திருக்கும் !

அரும்பிய காதல் மலராமல்
கருகி இருக்கும் !

பிறப்பும் இறப்பும் நிச்சயம் !
காதல் அனுபவுமும் நிச்சயம் !

காதல் பலவகை உண்டு !
மனதிற்குள் மறைந்த காதல் !

உதடுகள் உச்சரிக்காத காதல் !
உச்சரித்து ஏற்காத காதல் !

காதல் இல்லை என்றால்
இந்த உலகம் இல்லை !

காதலை உணர்ந்த பெற்றோர்கள்
ஊருக்குப் பயந்து எதிர்ப்பார்கள் !

காதல் திருமணத்தை அங்கீகரியுங்கள் !
கட்டாயம் வரதட்சணை ஒழியும் !

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *