கவிதைகள்வாழ்வியல்

மதுரை. கவிஞர் இரா.இரவி.

சதுரம் சதுரமாக வடிவமைக்கப்பட்ட மதுரை
சங்கம் காலம் முதல் இன்றுவரை அதே மதுரை !

தூங்காத நகரம் பெயர் கொண்ட மதுரை
தள்ளாத குளம் கொண்ட வற்றாத மதுரை !

உலக அதிசயமான மீனாட்சி கோயில் உள்ள மதுரை
உலகமே வியக்கும் கீழடிக்கு அருகே உள்ள மதுரை !

சங்கம் வைத்து தமிழ் என்றும் வளர்க்கும் மதுரை
சகோதரர்களாக அனைவரும் இணைந்து வாழும் மதுரை !

சகல மதத்தவர்களும் வாழ்ந்து வரும் மதுரை
சிற்பக்கலையை உலகிற்குப் பறைசாற்றும் மதுரை !

பருத்திப்பால் செகர்தண்டா கிடைக்கும் மதுரை
பஞ்சம் பிழைக்க வந்தோரை வாழ்விக்கும் மதுரை !

கறிதோசை முட்டை புரோட்டா கிடைக்கும் மதுரை
கனிவாகப் பேசிடும் மக்கள் வாழும் மதுரை !

சைவம் அசைவம் அனைத்தும் கிடைக்கும் மதுரை
சமண சமய குகைகள் உள்ள மதுரை !

கழுதை கூட வெளியில் செல்ல விரும்பாத மதுரை
கண்டவர்களைச் சுண்டி இழுக்கும் மதுரை !

சுற்றுலாத் தலங்கள் பல உள்ள மதுரை
சுந்தரத் தமிழ் எங்கும் கேட்கும் மதுரை !

உலகின் முதல் மனிதன் தோன்றிய மதுரை
உலகின் முதல் மொழி தமிழ் ஒலிக்கும் மதுரை ! 

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *