கவிதைகள்வாழ்வியல்

‘இரண்டாவது கோப்பை’ கவிஞர் இரா .இரவி !

இரண்டாவது கோப்பை எதிர்பார்ப்பது தவறு
எல்லோருக்கும் ஒரு கோப்பை என்பதே சரி !

தமிழகம் வந்தபோது காந்தியடிகளுக்கு
தாகம் தணிக்க இளநீர் வழங்கினார்கள் !

குடித்துவிட்டு சுவையாக உள்ளது என்றார்
காந்தியடிகளுக்கு மற்றொரு இளநீர் தந்தனர் !

காந்தியடிகள் வாங்க மறுத்து விட்டார்
காரணம் என்ன ? என்று கேட்டார்  தந்தவர் !

மற்றுவருக்கான இளநீரை நான் குடிப்பது
முறையன்று நியாயம் அன்று என்றார் !

இயற்கையின் வளத்தை ஒருவரே
இனிதே அனுபவிப்பது தவறு என்றார் !

வள்ளுவர் வழியில் பகிர்ந்துண்டு வாழ
வழி சொன்னவர் நமது அண்ணல் !

ஒருவருக்கு ஒரு கோப்பை என்று முறையாக
ஒவ்வருவருக்கும் வழங்கிடும் வேளையில் !

ஒருவர் மற்றும் இரண்டாவது கோப்பை
ஒருபோதும் கேட்கக் கூடாது உணர்க !

நாகரிகம் அருந்துவதிலும் வேண்டும்
நாகரிகமன்று இரண்டாவது கோப்பை !

ஆர்வமாய்  கேட்கும் இரண்டாவது கோப்பை
அடுத்தவருக்கானது என்பதை அறிந்திடுக !

யாரும் காணவில்லை என  இரண்டாவது கோப்பை
யாசிப்பதை உங்கள் மனசாட்சி தடுக்க வேண்டும் !

ஒரு கோப்பை போதும் என்று திருப்தி கொள்க
ஒவ்வருவருக்கும் வேண்டும் நினைவில் கொள்க !

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *