கவிதைகள்வாழ்வியல்

இழப்புகள் தரும் வலி ! கவிஞர் இரா .இரவி !

இருக்கும் போது பெற்றோர் அருமை
இன்று பலருக்குப் புரிவதில்லை !

அவர்களை இழந்த பின்னே
அருமை அறிந்து அழுவார்கள் !

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நின் பெற்றோர் அருமை இழந்தால் புரியும் !

மதிக்க வேண்டிய காலத்தில் மதிக்காது
மரித்த பின்னே மதித்து என்ன பயன் ?

மூத்தோர் சொல் முன்னே கசக்கும்
பின்னர் இனிக்கும் புரிந்திடுக !

அனுபவசாலிகளின் பட்டு உணர்ந்த
அனுபவத்தை கேட்டு நடத்தல் நன்று !

இருக்கும் போதே பெற்றோரை
இனியாவது மதித்து நடங்கள் !

மனம் நோகும் படி பேசாதீர்கள்
மனம் மகிழ்வோடு வைத்து இருங்கள் !

பிறப்பும் இறப்பும் ஒரே ஒரு முறைதான்
பெற்றோரைப் பேணிக் காத்திடுவோம் !

இழப்புகள் தரும் வலி தரும்
இருக்கும்போது போற்றிடுங்கள்!

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *