குறும்பா.ஹைக்கூ. கவிஞர் இரா .இரவி !
குறும்பா.ஹைக்கூ. கவிஞர் இரா .இரவி !
தோரண மாவிலை
தோராயமாக பார்த்தது
மாங்காய் !
குளத்தில்
படகானது
உதிர்ந்த இலை !
உழுது உதவியது
உழவனுக்கு
மண் புழு !
மலர் மீது
வண்ண மலரா ?
ஓ வண்ணத்துப் பூச்சி !
ஆயிரம் தேனீக்களின்
வாழ்க்கையை முடித்து
ஒரு தீக்குச்சி !
சேற்றில் நட்ட நாற்று
கதிர்களாய் விளைந்து சிரித்தது
உவகையில் உழவன் !
அறுவடைக்குப் பின்னும்
தந்து உணவு பசுவுக்கு
பூமி !
நன்றி கவிஞர் இரா.இரவி
பயனுள்ள தகவல்களைத் தாங்கிச் சிறப்பாகச் சுடர்விடுகிறது தமிழ் தீபம். வாழ்த்துகள்.
நன்றி!!