கவிதைகள்வாழ்வியல்

பயணம் ! கவிஞர் இரா .இரவி !

பிறப்பில் தொடங்கி இறப்பு வரை
பயணம் தொடரும் அதுவே வாழ்க்கை !

ஆதியில் பயணம் பெற்றோருடன்
அடுத்த பயணம் வாழ்க்கைத் துணையுடன் !

பெற்ற குழந்தைகளுடன் தொடரும்
பயணம் பாடங்கள் கற்பிக்கும் !

உலகைப் புரிந்துக் கொள்ள முடியும்
உணர்வுகளை அறிந்துக் கொள்ள முடியும் !

நேற்று போல இன்று இருப்பதில்லை
இன்று போல நாளை இருப்பதில்லை !

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்
ஓடுகின்ற கடிகார முள் போல ஓடும் !

நல்வழி நடந்தால் நிம்மதியாகும்
தீய வழி நடந்தால் நிம்மதி போகும் !

இலக்கு உள்ள பயணம் இனிக்கும்
இலக்கற்ற பயணம் இன்னல் தரும் !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *