புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி

tamil deepam

தீக்காயம் பட்ட போதும்
வருந்தவில்லை
புல்லாங்குழல்

காற்றை இசையாக்கும்
வித்தகக் கருவி
புல்லாங்குழல்

மவ்னமாகவே இருக்கும்
காற்றுத் தீண்டும் வரை
புல்லாங்குழல்

உருவில் சிறியது
உணர்வில் பெரியது
புல்லாங்குழல்

காட்டில் விளைந்து
காதோடு உறவாடும்
புல்லாங்குழல்

தீயால் துளைத்தபோதும்
இசை நல்கும்
புல்லாங்குழல்

இதழ் குவித்து விரல் பதித்து
காற்றுத் தந்ததும் இசைக்கும்
புல்லாங்குழல்

அன்று முதல் இன்று வரை
அற்புத இசை
புல்லாங்குழல்

எம்மொழியும் சம்மதம்
இனிய இசைப் பிறக்கும்
புல்லாங்குழல்

கானம் இசைத்து
கவலைப் போக்கும்
புல்லாங்குழல்

பல இசையிலும்
தனித்துக் கேட்கும்
புல்லாங்குழல்

விழிகள் மூடி செவிகள் திறந்தால்
தேன் பாயும்
புல்லாங்குழல்


மற்ற கவிதைகள்

வீரமங்கை ! கவிஞர் இரா .இரவி !

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி

எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது    கவிஞர் இரா.இரவி

மரத்தின் கேள்விகள் !  கவிஞர் இரா .இரவி !

சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி

சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி

தலையெழுத்து ! கவிஞர் இரா .இரவி !

சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !

கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !

ஓராயிரம் பொருள் கிடைக்கும் – ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி.

அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான் ! கவிஞர் இரா .இரவி

நன்றி
கவிஞர் இரா.இரவி 
Exit mobile version