கவிதைகள்வாழ்வியல்

யாசகம். கவிஞர் இரா.இரவி.

யாசகம் கேட்பது இழிவு என்றாலும்
யாசகம் இல்லை எனல் அதினினும் இழிவு !

அன்றே உரைத்தார் நமது திருவள்ளுவர்
அதனை மனதில் கொள்வோம் !

வசதி படைத்தவர்கள் வளங்கெ வேண்டும்
வாடியோருக்கு வழங்கும் மனம் வேண்டும் !

ஏழ்மையினால் கேட்க நேரிட்டால்
இல்லை என்று சொல்லாது வழங்குக !

கொடுத்துச் சிவந்த கரங்கள் இங்கு உண்டு
இறந்தபின்னும் வாழ்வு அவர்களுக்கு உண்டு !

கர்ணன் அளவிற்கு கொடுக்காவிட்டாலும்
கையால் முடிந்ததைக் கொடுக்க வேண்டும் !

ஈகை குணம் மனிதனுக்கு அழகு தரும்
இரக்க மனம் மனிதனுக்கு மேன்மை தரும் !

பெற்றவர் பெரும் மகிழ்ச்சியை
பார்ப்பதும் மனதிற்கு இன்பம் தரும் !

தருமம் தலை காக்கும் என்றனர்
தருமம் தலையாய கடமையாக்கட்டும் !

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால்
எவரும் எவரிடமும் கேட்க வேண்டாம் !

ஏற்றத்தாழ்வற்ற சமதர்ம சமுதாயம்
இனிதே படைப்போம் வாருங்கள் !

யாசகம் யாரும் கேட்கவும் வேண்டாம்
யாசகம் யாரும் தரவும் வேண்டாம் !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

One thought on “யாசகம். கவிஞர் இரா.இரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *