வாழ்வியல்கவிதைகள்

குறும்பா.ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

மணத்தோடு அவள் மனமும்
பரப்பியது
மலர்ந்த மலர்

நானே பெரியவன்
நினைக்கும்போதே
மிகச் சிறியவனாவாய்

சிந்திச் சென்றது
குப்பையோடு மணத்தையும்
குப்பைவண்டி

காசாக்கலாம்
குப்பையையும்
பெயர் எடுத்துவிட்டால்

ஒளிப் பாய்ச்சியது
ஓடியது இருள்
விளக்கு

நீண்ட பிரிவிக்குபின்
சந்திப்பு
கூடுதல் இன்பம்

வெட்கப் பட வேண்டும்
வல்லரசுகள்
சோமாலியா சோகம்

நன்றி
கவிஞர் இரா . இரவி

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *