கவிதைகள்வாழ்வியல்

பணத்தின் மறுபக்கம் ! கவிஞர் இரா .இரவி ! 

பணத்தின் மறுபக்கம் உழைப்பு உள்ளன 
பண்போடு உழைத்துப் பணம் ஈட்டுகின்றனர் ! 

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்திட 
அவசியம் தேவைப்படுகின்றது பணம் ! 

நேர்மையான வழியில் வந்த பணம் 
நிம்மதியான துக்கம் தந்து மகிழ்விக்கும் ! 

குறுக்கு வழியில் வந்த பணம் 
குதூகலத்தை அழித்துக் கவலை தரும் ! 

பணம் ஈட்டுவது தவறில்லை ஆனால் 
பணம் பணம் என்று அலைவது தவறு ! 

வந்த வருமானத்தில் சிறு பகுதியாவது 
வறியவர்க்கு உதவி செய்திட வேண்டும் ! 

ஏழைகளுக்கு உதவுவதில் இன்பம் உண்டு 
ஈந்துப் பாரத்தால் அவ்வின்பம் தெரியும் ! 

வாரி வழங்கிடும் வள்ளல் ஆகாவிடினும் 
வழங்கவே வழங்காத கஞ்சனாக வேண்டாம் ! 

பணத்தைவிட உயர்வானது நல்ல குணம் 
பணக்காரனைவிட நல்லவனே என்றும் வாழ்வான் ! 

மனிதாபிமானம் மனதில் என்றும் இருக்கட்டும் 
மனிதனைவிட பணம் என்றும் பெரிதல்ல ! 

அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட காகிதம்தான் 
அதைத்தாண்டி வேறு ஏதும் சிறப்பில்லை ! 

பணத்தாசையால் பலர் நிம்மதி இழந்தனர் 
பணத்தாசையால் பலர் உறக்கம் இழந்தனர் ! 

ஆசையே அழிவுக்கு காரணம்என்றார் புத்தர் 
ஆசையை அழிக்காவிடினும் குறைத்து வாழ்வோம் !

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *