கவிதைகள்வாழ்வியல்

மரத்தின் கேள்விகள் !  கவிஞர் இரா .இரவி !

பூ தந்தேன் !
காய் தந்தேன் !

கனி தந்தேன் !
நிழல் தந்தேன் !

காற்று தந்தேன் !
பரிசாக கோடாரி தந்து !

என்னை  வெட்டுவது முறையோ ?
என்னுயிர் பறிப்பது சரியோ ?

நாயுக்குக் கூட நன்றி உண்டு !
மனிதனுக்கு நன்றி இல்லை !

நாயுக்கும் கீழாய்
மனித மாறியதேனோ ?

நன்றி மறப்பது நன்றன்று
நல்ல திருக்குறள் படிப்பது நன்று !

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *