மரத்தின் கேள்விகள் ! கவிஞர் இரா .இரவி !
பூ தந்தேன் !
காய் தந்தேன் !
கனி தந்தேன் !
நிழல் தந்தேன் !
காற்று தந்தேன் !
பரிசாக கோடாரி தந்து !
என்னை வெட்டுவது முறையோ ?
என்னுயிர் பறிப்பது சரியோ ?
நாயுக்குக் கூட நன்றி உண்டு !
மனிதனுக்கு நன்றி இல்லை !
நாயுக்கும் கீழாய்
மனித மாறியதேனோ ?
நன்றி மறப்பது நன்றன்று
நல்ல திருக்குறள் படிப்பது நன்று !
நன்றி கவிஞர் இரா.இரவி