இந்த உலகிற்கு நீ வர காரணமானவள்
இந்த உலகை உனக்கு அறிமுகம் செய்தவள் !
தன் ரத்தத்தை பாலாக வழங்கியவள்
தன் துக்கத்தை தள்ளி வைத்ததவள் !
.பாசத்தோடு வளர்த்த மகன் மணமானதும்
பாசம் மறந்து அம்மாவைப் பிரிந்தான் !
தொப்புள் கொடி உறவான மகனை மறக்காது
தவித்து வருகிறாள் பெற்ற தாய் !
மனைவியை மதித்திடு தவறு இல்லை
மண்ணில் வாழும் தெய்வத்தை மறக்காதே !
நன்றி
கவிஞர் இரா.இரவி
Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982