கவிதைகள்வாழ்வியல்

மகாகவி பாரதியார் ! கவிஞர் இரா .இரவி !

தமிழுக்கு வளம் சேர்த்தவன்
தமிழென என்றும் நிலைத்தவன்
மகாகவி

மூடநம்பிக்கைகளை
முற்றாக வெறுத்தவன்
மகாகவி

தாழ்த்தப்பட்ட சகோதரனுக்கு
பூணூல் அணிவித்தப் புனிதன்
மகாகவி

சாதி வேற்றுமைகளுக்கு
சாவு மணி அடித்தவன்
மகாகவி

அக்கிரகாரத்தில் பிறந்த
அதிசிய மாமனிதன்
மகாகவி

பாட்டால் கோட்டைக் கட்டி
பரங்கியரின் கொட்டம் அடக்கியவன்
மகாகவி

முறுக்கு மீசைக்காரன்
முத்தமிழுக்குச் சொந்தக்காரன்
மகாகவி

சரித்திரம் படைத்த
சகலகலா வல்லவன்
மகாகவி

நூற்றாண்டு கடந்து வாழும்
கற்கண்டு கவிதைக் குன்று
மகாகவி

பெண்கள் விடுதலைக்கு
வித்திட்ட முதல்ப் பாவலன்
மகாகவி

சேதுபதி பள்ளியில் பணியாற்றி
மதுரைக்குப் புகழ் சேர்த்தவன்
மகாகவி

வயிற்றை விட இதயத்தை
பெரிதாய் மதித்தவன்
மகாகவி

சமரசம் செய்து கொள்ளாத
தன்மானச் சிங்கம்
மகாகவி

உடலால் மறைந்தாலும்
பாடலால் என்றும் வாழ்பவன்
மகாகவி

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *