கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

பொதுஉடைமை
உணர்த்தியது
செம்பருதி பூ

தங்கக்கூண்டு வேண்டாம்
தங்க கூண்டு போதும்
காதலர்களுக்கு

இயற்கையின்
இனிய கொடைகள்
வண்ணங்கள்

மூளையின்
முடங்காத முயற்சி
எண்ணங்கள்

இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இனிய இசை

ஈடு இணை இல்லை
இன்பத்தின் எல்லை
காதல் உணர்வு

அளவிற்கு அதிகமானால்
ஆபத்து
பணமும் காற்றும்

யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
சந்திக்கும்போது
பிரிந்த காதலர்கள்

அன்று பாசத்தால்
இன்று பணத்தால்
உறவுகள்

புலியைக்கண்ட மானாக
வேட்பாளரைக் கண்ட வாக்காளர்

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *