கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வீசியது யாரோ ?
வைரங்களை வானில்
நட்சத்திரங்கள் !

காட்சிப்பிழை
வளரவுமில்லை தேயவுமில்லை
நிலவு !

வாழ்நாளில்
வாழ்ந்த நாள்
எவ்வளவு ?

மீனவர்களின் கண்ணீரால்
உப்பானதோ ?
கடல் நீர் !

காத்திருந்தான் வலை விரித்து
வரவில்லை மீன்கள்
வந்தான் சிங்களன் !

அரசுகளைப் போலவே
மக்களிடம்
நிதிநிலை பற்றாக்குறை !

திருடியது யாரோ ?
நிலவை
அமாவாசை !

இடிந்து விழுந்தது வீடு
மணல் கொள்ளையன்
தலையில் !

பலநாளில் கட்டியது
சிலநிமிடங்களில் அழித்தான்
தேன் கூடு !

பயன்படாது சோற்றுக்கு
எரிமலை கக்கும்
குழம்பு !

பயன்படுத்துவதில்லை
சிறகிருந்தும்
மட வாத்து !

ஒற்றைக்கால் தவம்
வரமாக மீன்
கொக்கு !

பட்டுப் பூச்சிகளின்
சோகம் சொல்லியது
பட்டுச்சேலை !

புழுவின் மீதான ஆசை
போனது உயிர்
மீனுக்கு !

உணவில் நவீனம்
கேடு தரும்
உடல் நலத்திற்கு !

அறம் என்றால்
என்ன ? என்றார்
அரசியல்வாதி !

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *