கவிதைகள்

சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி

முதுகெலும்பான விவசாயி வாழ்வு வசந்தமாகட்டும்
முக்கியமான தொழிலான விவசாயம் செழிக்கட்டும் !

பெண்களுக்குச் சமஉரிமை சாத்தியமாகட்டும் !
பெனடிமைத்தனம் சமுதாயத்தில் ஒழியட்டும்

வரதட்சணைக் கொடுமை இலாது அகலட்டும் !
வஞ்சியர் திருமணம் இயல்பாக நடக்கட்டும் !

பெண்சிசுக் கொலை இல்லாது ஒழியட்டும் !
பெண் குழந்தைகளைப் பேணிடும் நிலை வரட்டும் !

வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியட்டும் !
வேலை வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டட்டும் !

சாதி சமயச் சண்டைகள் இல்லாது ஒழியட்டும் !
சகோதர எண்ணம் எல்லோருக்கும் வரட்டும் !

வன்முறை நாட்டில் எங்குமின்றி ஒழியட்டும் !
வசந்தம் வாழ்வில் அனைவருக்கும் வசப்படட்டும் !

அநீதிகள் நாட்டில் இல்லாது ஒழியட்டும் !
அறவழியில் சமுதாயம் எந்நாளும் நடக்கட்டும் !

மூடநம்பிக்கைகள் முற்றாக ஒழியட்டும் !
மூளையைப் பகுத்தறிவிற்கு பயன்படுத்தட்டும் !

செயற்கை உரங்கள் இல்லாது ஒழியட்டும் !
இயற்கை உரங்கள் எங்கும் தூவட்டும் !

மதவெறி மண்ணோடு மண்ணாக முறையிட்டும்!
மனிதநேயம் மனங்களில் மலரென மலரட்டும் !

நச்சுக் கலைகள் எங்குமின்றி அழியட்டும் !
நல்ல கலைகள் நாட்டில் எங்கும் வளரட்டும் !

இளைய சமுதாயம் மூத்தோரை மதிக்கட்டும் !
இனிவரும் சமுதாயம் சிறந்ததாகச் சிறக்கட்டும் !

உலகின் முதல் மொழி தமிழ் உலகம் உயரட்டும்!
உலகம் முழுவதும் உள்ள மொழி தமிழ் அறியட்டும் !

ஏற்றத் தாழ்வுகள் இல்லாது ஒழியட்டும் !
எங்கும் எதிலும் சமநிலை என்றாகட்டும் !

ஆணவ எண்ணம் அடியோடு அழியட்டும் !
அமைதி பூங்காவாக அகிலம் திகழட்டும் !

தீய எண்ணங்கள் மனதிலிருந்து ஒழியட்டும் !
நல்ல எண்ணங்கள் மனதினில் நிலைக்கட்டும் !

மரங்களை வெட்டுவது இல்லாது ஒழியட்டும் !
மரங்களை வளர்ப்பது மக்களின் கடமையாகட்டும் !

ஏரி குளம் கண்மாய் எங்கும் தூர் வாரட்டும் !
எல்லா மழைநீரையும் அவை சேமிக்கட்டும் !

நீதி எங்கும் எதிலும் நிலைபெறட்டும் !
நிதிக்கு மயங்கும் நிலை மாறட்டும் !

வாக்கில் மெய் என்றும் நிலைக்கட்டும் !
வள்ளுவர் வாக்கென வாழ்வாங்கு வாழட்டும் !

பஞ்சம் பட்டினி இல்லாது ஒழியட்டும் !
பாவம் ஏழைகள் யாருமில்லை நிலை வரட்டும் !

கொலை கொள்ளை எங்கும் இல்லாது ஒழியட்டும் !
கொள்கை குறிக்கோளோடு மக்கள் வாழட்டும் !

இலஞ்சம் ஊழல் எங்கும் இல்லாது ஒழியட்டும் !
இலட்சிய நோக்குடன் மக்கள் செயல்படட்டும் !

துன்பம் கவலை வாழ்வில் தூர விலகட்டும் !
இன்பம் மகிழ்ச்சி என்றும் நிரந்தரமாகட்டும் !

துயரம் சோகம் இல்லாது ஒழியட்டும் !
தூய நல்வாழ்க்கை எல்லோருக்கும் அமையட்டும் !

கல்வியைக் காசாக்கும் கொடுமை ஒழியட்டும்
கல்வி அனைவருக்கும் இலவசம் என்றாகட்டும் !

மதுக்கடைகள் நாட்டில் இல்லாது ஒழியட்டும் !
மதுப்பழக்கம் மக்களுக்கு இல்லாது ஒழியட்டும் !
.
உடல்தானம் பற்றிய விழிப்புணர்வு வளரட்டும் !
உடல்தானத்தால் பலர் உயிர் வாழட்டும் !

கண்தானம் என்பது இனி கட்டாயமாகட்டும் !
கண்தானம் தந்தால்தான்சுடுகாட்டில் எனுமதி என்றாகட்டும் !

நன்றி
கவிஞர் இரா.இரவி 


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top