மதுரையிலிருந்து கோவை, புதுக்கோட்டைக்கு மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், கல்லீரல் அனுப்பி வைப்பு: 2 பேர் மறுவாழ்வு பெற்றனர்
மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனையி லிருந்து மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், கல்லீரல் கோவை, புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர். விருதுநகர் அருகே சாலை விபத்தில் காயமடைந்த செல்வம் (33) மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது இதயம் கோவை மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கும், அவரது கல்லீரல் புதுக்கோட்டை மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கும் தானமாக வழங்க முடிவு எடுக்கப்பட்டது.