கவிதைகள்வாழ்வியல்

எழுத்து ! – கவிஞர் இரா. இரவி

அறிந்தது மனதில் நின்றது
அறியாதது அறிய வைத்தது 

எழுத்து !

மனிதனின் வளர்ச்சிக்கும்
சாதனைக்கும் காரணம்

எழுத்து !

இல்லாத  உலகம்
நினைக்கவே அச்சம் !

எழுத்து !

திருவள்ளுவரை
உலகிற்குக் காட்டியது

எழுத்து !

அறிஞர்கள் கவிஞர்கள்
எழுத்தாளர்கள் மூலப் பொருள்

எழுத்து !

ஒலி வடிவம் வரி வடிவமானது
நாகரீகத்தின் தொடக்கம் மொழியின் உச்சம்

எழுத்து !

தோன்றாமல்  இருந்திருந்தால்
ஆதிவாசியாகவே இருந்திருப்பான்

எழுத்து !

அறிவு வளரவும் ஆள் வளரவும் 
உதவியது

எழுத்து !

பார்வையற்றவர்களும்
தடவி உணரும் உன்னதம்

எழுத்து !

ஆற்றலையும் வீரத்தையும்
பறை சாற்றியது கல்வெட்டு

எழுத்து !

காவியம் காப்பியம்
காத்தது ஓலைச்சுவடி

எழுத்து !


நன்றி !
கவிஞர் இரா. இரவி

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *