உறவுகள்கவிதைகள்

கதைகளின் காரணங்கள்.. 2 சூர்யா ரெங்கசாமி

மலையாடு மாதிரி மண்டையில மயிர வச்சுக்கிட்டு ..

பொழுதுக்குள்ள முடிவெட்டி வரல- பொத்த பானதான் தலைக்கு வரும் –

அம்மா

காசு வேணும் கடைக்கு போக என்றால்

 குடுக்குற நெல்லுக்கு கொஞ்சமாவது அவனுக்கு வேலை குடுங்கடா

 நம்ம ஊரு ஆளுகிட்ட போய் வெட்டி வா.

பல ஆண்டுகள் பழக்கம் இருந்தும் , படியவில்லை -இன்னமும்

பக்குவமாய் வெட்டி விட அவனுக்கு.

கத்தரியில்  வெட்ட சொன்னால் கத்தியாலே வெட்டும் வேலைக்காரன்

 சிகை வெட்டவா? ,சிரம் வெட்டவா? போறோம் என்று தெரியாமலே

 போய் சேர்ந்தேன் -தலையை குடுத்து

முடி  வெட்ட சொன்னேன் ….

என்னடா வெட்டி இருக்க மலையாடு மயிறு போல-

சொட்ட சொட்ட யா -அம்மா

பொங்கி வரும் கண்ணீரையும் வார்த்தைகளையும் மடக்கி

முடி இல்லா மண்டையை தடவி கொண்டே ..

அய்யோ ! அம்மா ! நீ மலையாடு பார்த்து இருக்கியா? இல்லையா ?

அந்த கழுதைய நான் எங்கடா கண்டேன்- அம்மா

ஆயிரம் கதைகள் சொல்லுபவள்..

கதைகளின் காரணங்கள்.. 2

சூர்யா ரெங்கசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *