கவிதைகள்வாழ்வியல்

கவிஞர் இரா .இரவி ! Poet Ira . Ravi

கவிஞர் இரா .இரவி !

அழகிய ஓவியமான்து
வெள்ளை காகிதம்
துரிகையால்

சக்தி மிக்கது
அணுகுண்டு அல்ல
அன்பு

மழை நீர் அருவியாகும்
அருவி நீர் மழையாகும்
ஆதவனால்

ஒன்று சிலை ஆனது
ஒன்று அம்மிக்கல் ஆனது
பாறை கற்கள்

காட்டியது முகம்
உடைந்த பின்னும்
கண்ணாடி

உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்

பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை

கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பை போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி

இல்லாவிட்டாலும் கவலை
இருந்தாலும் கவலை
பணம்

உடல் சுத்தம் நீரால்
உள்ளத்தின் சுத்தம்
தியானத்தால்

மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
மயில் இறகு குட்டி போடும்

பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் தொட்டி மீன்கள்

அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை

இளமையின் அருமை
தாமதமாகப் புரிந்தது
முதுமையில்

தோற்றம் மறைவு
சாமானியர்களுக்குதான்
சாதனையாளர்களுக்கு இல்லை
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *