வாழ்வியல்

இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! நினைவு நாள் ! கவிஞர் இரா .இரவி !

tamil deepam Ravi jayakathan

கடலூரில் பிறந்த இவர் கதைக்கடல்
சென்னையில் சிறந்த இவர் இலக்கியக்கடல்
தந்தை தண்டபாணி இராணுவ அதிகாரி என்ற போதும்
தன் மனதில் பட்டதை செய்து வளர்ந்தவர் !
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போலவே
பல தொழில்கள் செய்து வாழ்வை கற்றவர் !
முருகேசன் என்பது இயற்பெயராக இருந்த போதும்
ஜெயகாந்தன் ஜெ.கே. என்றே அறியப்பட்டவர் !
அய்ந்தாவது மட்டுமே படித்து இருந்த போதும்
அளப்பரிய ஆற்றல் எழுத்தில் கைவரப்பட்டவர் !
கல்விக்கும் கருத்துக்கும் தொடர்பில்லை என்பதை
கதைகளின் மூலம் நிரூபித்துக் காட்டியவர் !
முற்போக்குச் சிந்தனைகளை கதைகளில் வடித்து
முத்திரைக் கதைகளின் மூலம் தனிமுத்திரை பதித்தவர் !
ஞானபீடம் என்ற உயர்ந்த விருது பெற்றவர் !
ஞானபீடம் விருதுக்கே பெருமை பெற்றுத் தந்தவர் !
கொள்கைகளை மாற்றிக் கொண்டே போதும்
குணங்களை மாற்றிக் கொள்ளாத பண்பாளர் !
நாவல்கள் திரைப்படங்கள் ஆன போதும்
நானே பெரியவன் என்று என்றும் சொல்லாதவர் !
மனதில் பட்டதை மறைக்காமல் உரைத்தவர்
மனது புண்படும் என்ற கவலை கொள்ளாதவர் !
எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்
எதிர்கருத்து இருந்தால் பேசிடத் தயங்காதவர் !
கோடிக்கணக்கான வாசகர்களைப் பெற்றிட்ட
கதையரசன் பேச்சில் கதை விடாத மாமனிதன்!
மகாகவி பாரதியாரை மிகவும் நேசித்தவர்
மட்டற்ற எழுத்தால் மகுடம் சூடியவர் !
மக்கள் மனங்களை எழுத்தால் கவர்ந்தவர்
மக்கள் மனங்களைப் படம்பிடித்துக் காட்டியவர் !
பணக்காரன் ஏழை பாகுபாடு பார்க்காதவர் !
பாராட்டும் ரசிகரை ரசிக்கும் நல்லவர் !
எழுதுகோலின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர் !
எழுத்தால் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் !
எழுத்தாளருக்கு உரிய கம்பீரத்தை அவர்
என்றுமே கட்டிக் காத்து வந்தவர் !
மறக்க முடியாத மாண்புமிக்க கதைகளை
மக்களுக்கு வழங்கி மனங்களில் வாழ்பவர் !
இறுதி வரும் வரை எழுதி விட்டாலும்
எழுதிய யாவும் இறுதிக்குப் பின்னும் நிலைக்கும் !
தமிழை அறிஞர்களைப் பழித்தப் போது முரண்பட்டேன் !
தமிழ் வளர அவர் ஒரு காரணமானதால் உடன்பட்டேன் !
கெட்டப்பழக்கங்களில் சில பழகாமல் இருந்திருந்தால்
கொஞ்சம் கூடுதலாகவே வாழ்ந்து இருப்பார் !
உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும்
உன்னதமான பாத்திரப் படைப்புகளால் வாழ்கிறார் என்றும் !
ஈடு செய்ய முடியாத இழப்பு உண்மை
இணையற்ற எழுத்தாளர் அவர் உண்மை !
எழுத்துக்களால் வாழும் ஆளுமைக்கு அழிவில்லை !
இலக்கிய இமயம் என்றால் மிகையில்லை

இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! நினைவு நாள் !

நன்றி
கவிஞர் இரா.இரவி

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top