கவிதைகள்

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

பார்த்துப் போமா ! கவிஞர் இரா .இரவி !
உன்னை வழியனுப்பும்
உன் அம்மா பார்த்துப் போமா !
என்கிறார்கள் !
சாலையில் கடந்தும் செல்லும் நீ
என்னை பார்த்துவிட்டுத்தான்
செல்கிறாய் !

பார்த்து விட்டனர் ! கவிஞர் இரா .இரவி !
யாரும் பார்க்காதபோது
இருவரும் பார்த்துக் கொள்கிறோம் !
நாம் பார்த்துக் கொள்வதை
எல்லோரும் பார்த்து விட்டனர் !

அழகோ அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ பேசுவது அழகுதான்
நான் பேசாமலே
அதனை ரசிப்பது வழக்கம் !
ஆனாலும்
நீ பேசாமல்
இருக்கும்போதோ
அழகோ அழகு !
கொள்ளை அழகு !

அழித்த கோட்டை ! கவிஞர் இரா .இரவி !
உச்சி எடுத்து சீவ வேண்டாம் என்று
அன்று நீ வேண்டுகோள் விடுத்தாய் !
இன்று வரை உச்சி எடுப்பதில்லை !
கிழித்த கோட்டை தாண்டுவதில்லை
என்பதை போல
நீ அழித்த கோட்டை
நான் போடுவதே இல்லை !

தொட்டு விட்டது ! கவிஞர் இரா .இரவி !
நெற்றியில் நீ வைத்த
முத்தம் !
முத்தமே அல்ல !
என்னுள் யுத்தம் செய்தது !
ஊடுருவி உயிர் வரை சென்று
தொட்டு விட்டது !

சத்து ! கவிஞர் இரா .இரவி !
இதழ்களில் நடந்த முத்தம்
நதி கடலில் கலந்த
நல்ல சங்கமமாய் !
கடலில் கிடைப்பது முத்து !
முத்தத்தில் கிடைப்பது சத்து !

எனக்கு வலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
உன் புகைப்படத்தை
அஞ்சலில் அனுப்ப வேண்டாம் !
மின் அஞ்சலில் அனுப்பு போதும் !
அஞ்சலில் அனுப்பினால்
அஞ்சல்காரர் உரை மீது
பதிக்கும் முத்திரைகள்
உனக்கு வலிக்காவிட்டாலும்
எனக்கு வலிக்கும் !

அது எப்படி ? கவிஞர் இரா .இரவி !
ரோஜா அழகுதான் !
உலகம் அறிந்த உண்மைதான் !
நீ தலையில் சூடியதும்
ரோஜாவின் அழகு
குறைந்து விடுகிறது !
உன் அழகோ
கூடி விடுகிறது !
அது எப்படி ?

என் சுவாசமே நீதானே ! கவிஞர் இரா .இரவி !
மல்லிகை வாசம்தான் !
ஆனால்
உன் வாசத்தின் முன்னே
மல்லிகை வாசம்
தோற்று விடுகின்றது !
உன் வாசத்திற்கு இணையான
வாசம் உலகில் இல்லை
என் சுவாசம் சொல்லியது !
என் சுவாசமே நீதானே !

எல்லாமே அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ நின்றால் அழகு !
நீ நடந்தால் பேரழகு !
நீ பார்த்தால் அழகு !
நீ முறைத்தால் பேரழகு !
நீ சிரித்தால் அழகு !
நீ சிகை கோதினால் பேரழகு !
எல்லாமே அழகு !

அழகு கூடி விடும் ! கவிஞர் இரா .இரவி !
ஆடைகளில் சுடிதார்
அழகுதான் !
அனைவரும் அறிந்ததுதான் !
ஆனாலும்
அவள் அணிந்ததும் சுடிதார்
அழகு கூடி விடும்
அற்புதம் நிகழ்த்துவது
அவளின் அழகு !

காண வந்தேன் ! கவிஞர் இரா .இரவி !
கடவுள் நம்பிக்கை
எனக்கு
இல்லாவிட்டாலும்
திருவிழாவிற்கு வந்தேன்
கடவுளை வணங்க அல்ல !
கன்னி உன்னைக் காண
வந்தேன் !
கடவுளுக்காக வந்தவர்கள்
கடவுளை தரிசிக்க
உனக்காக வந்த நான்
உன்னை தரிசித்தேன் !

நினைத்தாலே இனிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
சுவைத்தால்தான் இனிக்கும்
செய்த இனிப்பு
நினைத்துப் பார்த்தாலே
இனிக்கும்
இனிய காதல் !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top