சாசகான் மும்தாசுக்கு மாளிகை கட்டினான்
வா .மு .சேயோ சேதுமதிக்கு ஆலயம் கட்டினார்
இறந்த பின்னும் மனைவியை வணங்கும் மாண்பாளர்
இன்றைய ஆணாதிக்க மனிதர்களுக்கு பாடம் புகடுப்பவர்
சேதுமதி அன்னையை மணந்ததால்தானோ என்றும்
சேது சமுத்திரத் திட்டத்தை மதியில் வைத்து உள்ளார்
தமிழுக்காக நடைப்பயணம் நடந்த வேங்கை
தமிழுக்காக உரக்க குரல் கொடுக்கும் சிங்கம்
இவர் மீசையின் நிறம் வெள்ளை அளவு பெரிது
இவர் உள்ளமோ வெள்ளை மனமோ பெரிது
மரபு க்கவி புனைவதில் மாபெரும் வல்லவர்
மரபு க்கவி மறையாமல் காத்து வருபவர்
பெருங்கவிக்கோ வெற்றிக்கு அவரது துணைவி
அன்னை சேதுமதி முன் நின்றார்கள்
மனைவி இறந்தவுடன் மறுமணம் புரியும் காலத்தில்
மனைவி இறந்தவுடன் ஆலயம் கட்டி வணங்கும்
பெருங்கவிக்கோ வாழ்க பல்லாண்டு

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982