வாழ்வியல்கவிதைகள்

‘பத்ம வியூகம்’ கவிஞர் இரா .இரவி !

உள்ளே செல்பவன் உற்று  நோக்கி செல்ல வேண்டும்
உள்ளே செல்லும்  வழியே திரும்பிட வேண்டும் !

வந்த வழி மறந்தால் திரும்பிட முடியாது
வந்த வழி நினைவில் நிறுத்திட வேண்டும் !

விதி என்று எதுவும் இல்லை உணர்ந்திடுக
விதி என்பது கட்டுக்கதை என்பதை புரிந்திடுக !

மதியால் வாழ்வதே சிறந்த வாழ்வு
மதிக்கு இணை வேறு உலகில் இல்லை !

எண்ணம் ஒன்றாக இருந்தால் வழி மறக்காது
எண்ணம் சிதைந்தால் சிந்தனை சிதறும் !

மனதில் வரும் வழியை பதிய வைத்திடு
மூச்சு உள்ளவரை நினைவில் நிற்கும் !

நன்றி
கவிஞர் இரா.இரவி

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *