கவிதைகள்

கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !

ஒற்றைச் சொல்லில்
உலகம் அறிந்தது
கலைஞர் !

பெரியாரின் கனவுகளை
நனவாக்கிய
போராளி !

அண்ணாவின்
அடிச்சுவட்டில்
அடி எடுத்து வைத்தவர் !

முதல்மொழி தமிழுக்கு
முதலிடம்
முன்மொழிந்தவர் !

மனிதனை மனிதன் இழுத்த
கைவண்டிக்கு
முடிவு கட்டியவர் !

சமூகநீதியைக் காத்தவர்
சமூகம் பாராட்டியவர்
காலத்தில் நின்றவர் !

அணைகள் பல கட்டியவர்
பாலங்கள் பல போட்டவர்
தமிழகத்தை உயர்த்தியவர் !

கேள்வியும் நானே
பதிலும் நானே
என சிந்திக்க வைத்தவர் !

தமிழின் பெருமையை
தரணிக்கு
உணர்த்தியவர் !

மாற்றுக்கட்சியினரும்
மதித்திடும்
மாண்பாளர் !

தேனீயென சுற்றியவர்
தோணியென உழைத்தவர்
ஏணியென நின்றவர் !

சுறுசுறுப்பின் இலக்கணம்
சோர்வே அறியாதவர்
சுடரென ஒளிர்ந்தவர் !

வள்ளுவர் கோட்டத்தை
வனப்பாக
வடிவமைத்தவர் !

வான் முட்டும் சிலையை
வள்ளுவருக்கு
வைத்தவர் !

குறளோவியம்
தீட்டிய
இலக்கிய ஓவியர் !

கருப்பு கண்ணாடியையும்
மஞ்சள் துண்டையும்
அடையாளமாக்கியவர் !

திரைப்பட வசனத்தில்
தனி முத்திரைகள்
பதித்தவர் !

கவியரங்குகளில்
கர்ஜனை செய்திட்ட
கவிச்சிங்கம் !

செம்மொழிப்பாடலை
சிறப்பாக
செதுக்கியவர் !

மந்தி மொழியான
இந்தி மொழியை
என்றும் எதிர்த்தவர் !

காலத்தால் அழியாத
கற்கண்டுக் கவிதைகள்
யாத்தவர் !

கோடான கோடி
இதயங்களை
கொள்ளை அடித்தவர் !

சட்டமன்ற உரையில்
சரித்திரம்
படைத்தவர் !

தமிழகம் மட்டுமல்ல
இந்திய அரசியலிலும்
தடம் பதித்தவர் !

நிரந்தர
சட்டமன்ற உறுப்பினராக
நிலைத்து நின்றவர் !

ஆதிக்கம்
எங்கிருந்தாலும்
எதிர்த்தவர் !

என்றுமே
தேர்தலில் தோற்காத
வெற்றி வீரர் !

படிக்காத மேதை
பகுத்தறிவுப் பாதை
பிடிக்காது கீதை !

நிறுத்தியது
சுவாசம்
சூரியன் !

முத்தமிழ் அறிஞர்
மூத்த அரசியல் தலைவர்
நிறுத்தினார் மூச்சை !

எடுத்தது
நிரந்தர ஒய்வு
ஒய்வறியாச் சூரியன் !

நிரந்தரமானது
தூக்கம்
ஆதவன் !

இமயம் சரிந்தது
மிகையன்று
உண்மை !

ஓய்ந்தது
பின்தூங்கி முன்எழும்
சுறுசுறுப்பு !

சரித்திரம் படைத்தவர்
சகலகலா வல்லவர்
சாய்ந்து விட்டார் !

பராசக்தி படத்தில்
பகுத்தறிவை
விதைத்தவர் !

கழகத்தவரை
கரகர காந்தக்குரலால்
கட்டிப்போட்டவர் !

உடன்பிறப்புக்கு
மடல் வரைந்து
மகிழ்ச்சி தந்தவர் !

கணக்கில் அடங்காது
சொல்லி முடியாது
உன் சாதனைப்பட்டியல் !

உன் உடலுக்குத்தான் மறைவு
உன் உணர்வுக்கு என்றுமில்லை மறைவு !

திட்டங்களில் வாழ்கிறார் கலைஞர்!
கவிஞர் இரா. இரவி !

என் உயிரினும் மேலான உடன்பிறப்பே
என்று உச்சரித்து சகோதர உணர்வு தந்தவரே!

சமத்துவபுரம் சமைத்து சாதியை ஒழித்து
சகோதரத்துவம் வளர்த்த சமத்துவ சிந்தனையாளரே!

உழவர் சந்தை எனும் திட்டம் தொடங்கி
உழவர்களின் உள்ளம் மகிழ்ந்திட வைத்தவரே!

கைம்பெண் மறுவாழ்வு திட்டம் தொடங்கி
கைம்பெண் வாழ்வில் ஒளி வழங்கியவரே!

சங்கத்தமிழை சாமானியருக்கும் சமர்ப்பித்தவரே
சங்கநாதம் முழங்கி தமிழை வளர்த்தவரே!

உலகப்பொதுமறையான ஒப்பற்ற திருக்குறள்
உலகம் முழுவதும் பரவிட வழிவகுத்தவரே!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டுமென
அர்ச்சகர் பயிற்சி அளித்திட செய்தவரே!

கூட்டணிக்கு டில்லியே தேடிவர வைத்தவரே
கூட்டாட்சி முறைக்கு விதைகள் விதைத்தவரே!

கொண்ட கொள்கையின் குன்றென நின்றவரே
கொடுங்கோல் சிறைக்கும் அஞ்சாது எதிர்த்தவரே!

உதயசூரியன் சின்னத்திற்கு ஐந்துவிரல் காட்டியவரே
உண்மையில் ஐந்துமுறை முதல்வரானவரே!

அரசியலுக்கு அழைத்து வந்தவர் பட்டுக்கோட்டை அழகிரி
அவர் நினைவாக மகனுக்கு பெயர் இட்டவரே!

பெரியாரின் கொள்கையையும் அண்ணாவின் கனவையும்
பெருமளவு நிறைவேற்றி வைத்த நிறைகுடமே!

இருக்கும்வரை உம்மைப்பற்ரி கவிதை எழுதவில்லை
ஏன் தெரியுமா? ஈழத்தமிழர் விசயத்தில் அழுத்தம் போதவில்லை!

அழுத்தமாக நெஞ்சில் பதிந்த வருத்தமே காரணம்

அது தவிர மற்ற எல்லாம் சிறப்புத்தான் உம் சாதனைகள்!

ஈடில்லாக் கலைஞர் !கவிஞர் இரா. இரவி.

பின்இரவில் தூங்கி முன்காலையில் எழுந்த சூரியன்
பத்திரிகைகள் படிப்பதை கடமையாகக் கொண்ட வீரன்!
நக்கல் நையாண்டி பதில்களின் மூலம் எதிரணியினருக்கும்
நகைச்சுவை வரவழைத்து மகிழும் திறனாளர்!
உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையில்
ஓய்வெடுக்கும் ஓய்வறியாச் சூரியன் நீ!
அண்ணாவின் இதயத்தில் இடம் பிடித்திட்ட கலைஞர்
அண்ணாவின் சமாதியின் அருகிலும் இடம் பிடித்தார்!
போராடாமல் எதுவும் கிடைக்காது என்பதை
போராடி வென்று காட்டினார் மூச்சு நின்ற பின்னும்!
மெரினாவில் மட்டும் இடம்பிடிக்கவில்லை கலைஞர்
மக்கள் மனங்களிலும் இடம்பிடித்தார் கலைஞர்!
இருபத்திஓராம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மனிதரென
இனி வரலாறு சொல்லுமளவிற்கு வரலாறு படைத்தவர்!
ஒரு நூற்றாண்டுக்கு சற்று குறைவான வாழ்நாளில்
ஒரு யுகத்திற்கான கடமைகளை சாதனைகளைப் புரிந்தவர்!
தொண்ணூற்றி அய்ந்து ஆண்டுகள் வாழ்ந்த காலம்
தரணி உள்ளவரை உன்புகழ் என்றும் நிலைக்கும்!
சாதாரண வாழ்வன்று உந்தன் வாழ்வு
சாதனை வாழ்வானது உந்தன் வாழ்வு!
சராசரி வாழ்க்கையன்று உந்தன் வாழ்க்கை
சரித்திரம் படைத்திட்ட சிகரவாழ்வு உன்வாழ்வு!
யுகப்புரட்சி நிகழ்த்திட்ட உந்தன் ஆட்சியில்
யுகம் கடந்தும் நிலைக்கும் உந்தன் புகழ்!
கரகரத்த குரலால் காந்தமென கவர்ந்தாய் தொண்டர்களை
கடிதம் எழுதி முரசொலி மூலம் மகிழ்வூட்டினாய்!
எண்ணிலடங்காத திட்டங்கள் பல தீட்டி பெரியாரின்
எண்ணத்தை நிறைவேற்றிய பெருந்தொண்டர்!
அறிஞர் அண்ணா கண்ட கனவுகளை நனவாக்கினாய்
அகிலம் போற்றிடும் வண்ணம் செயல்படுத்தினாய்!
திரைப்படத்துறையில் தனி முத்திரைப் பதித்தவர்
தமிழக முதல்வராக ஐந்துமுறை இருந்தவர்!
எழுத்து பேச்சு இரண்டிலும் சாதனை நிகழ்த்தியவர்
இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக விளங்கியவர்!
சுறுசுறுப்பின் திலகமாகத் திகழ்ந்து சாதித்தவர்
சோம்பேறித்தனத்தை எப்போதும் அண்ட விடாதவர்!
தோன்றின் புகழோடு தோன்றுக இலக்கணமானவர்
தமிழின் இமயம் வள்ளுவருக்கு வானுயர சிலை அமைத்தவர்!
கவியரங்க மேடைகளில் கைதட்டல்கள் பெற்றவர்
கவியரங்கின் தலைமையேற்று கவித்தமிழ் வளர்த்தவர்!
சமூகநீதிக்காக சங்கநாதம் முழங்கிய வீரர்
சாதிகள் ஒழிய சமத்துவபுரம் கட்டிய தீரர்!
இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் இருக்கட்டும் சாதி என்றவர்
இரட்டை குவளை முறைகளுக்கு முடிவு கட்டியவர்!
திருக்குவளையில் பிறந்தவர் திருவாளர் மு.க.
தரணி போற்றிடும் செயல்பாட்டாளர் மு.க.
மு என்ற முன்எழுத்து முன்னேற்றத்தின் முகவரியானது
க என்ற முதலெழுத்து கலை வளர்க்கும் திறனானது!
உதயசூரியன் உந்தன் சின்னம் என்பதால்
ஒப்பற்ற சூரியன் போலவே ஓய்வின்றி உழைத்தாய்!
பெரியாரின் நெஞ்சில் இருந்த முள்ளை எடுத்தாய்
பார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆனார் இன்று!
மாணவனாக இருந்த போதே ‘இளமைப் பலி’ கட்டுரையில்
மங்கையர் விதவையானால் மறுமணம் வேண்டும் என்றாய்!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாராட்டைப் பெற்றவர்
புடம் போட்ட தங்கமாக கொள்கையில் மிளிர்ந்தவர்!
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
மந்திரமாக ஒலித்து செயல்படுத்திய செயல் வீரர்!
பராசக்தியில் தொடங்கி வைத்த நீதிமன்றக் காட்சி
பிணமான பின்னும் தொடர்ந்தது நீதிமன்றக் காட்சி
தனியாக அல்ல அண்ணா அருகில் நீ என்ற பின்னே
தவித்திட்ட தொண்டனுக்கு வந்தது நிம்மதி பெருமூச்சு


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top