கோடுகளின்
கவிதை
ஓவியம்
சொற்களின்
ஓவியம்
கவிதை
மதிக்கப்படுவதில்லை
திறமைகள் இருந்தும்
குடிகாரர்கள்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
அரசு ஊழியருக்கு
வணிகராக ஆசை
ஊழல் மறைக்க
ஊழல் செய்யும்
அரசியல்வாதிகள்
பழமையானாலும்
விறகாவதில்லை
வீணை
ஜடப் பொருள்தான்
மீட்டத் தெரியாதவர்களுக்கு
வீணை
அம்புகள் படாத வில்
விழி அம்புகள் அட்ட வில்
வானவில்
புகழ் அடையவில்லை
பிறந்த பூமியில்
புத்தன்
ஒருபோதும் மறப்பதில்லை
உணவு இட்டவர்களை ‘
நாய்கள்
வெடி வெடிப்பதில்லை
சில கிராமங்களில்
பறவைப்பாசம்
மனிதனை விட
அறிவாளிகள் விலங்குகள்
சுனாமியில் தப்பித்தன
அறிவுறுத்த வேண்டி உள்ளது
மனிதனாக வாழ
மனிதனை
அடிக்கரும்பு
அதிக இனிப்பு
மண்ணுக்கு அருகில்
மேய்ப்பன் இன்றியே
இல்லம் வந்தன
ஆடுகள்
நிலத்தில் பிறந்து நீரில் வாழ்ந்து
நிலத்தில் முடியும்
படகு
மனிதனின் கால் பட்டதால்
களங்கமான
நிலவு
நன்றி கவிஞர் இரா.இரவி

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982