உறவுகள்வாழ்வியல்

பெண்ணே அழாதே பெண்ணே! கவிஞர் இரா.இரவி…

அழப் பிறந்தவள் அல்ல நீ
ஆளப் பிறந்தவள் நீ
பெண்ணாகப் பிறந்ததற்கு
கவலை கொள்ளாதே நீ
கர்வம் கொள் நீ
பெருமை கொள் நீ
அடிமை விலங்கை
அடித்து நொறுக்கு
அற்புதச் சிறகை
விரித்துப் பற.
கொட்டக்கொட்ட
குனிந்து போதும்
கொட்டும் கரம்
முறித்திடு நீ
இனி வெங்காயம்
நறுக்கும் போது கூட
அழவேண்டாம் .
இனி வெங்காயம்கூட
நறுக்க வேண்டாம் .
விழிகளில் கண்ணீர் நிறுத்து
இதழ்களில் புன்னகை ஏந்து.

நன்றி
கவிஞர் இரா.இரவி

What's your reaction?

Related Posts

1 Comment

  1. Menaga says:

    Super

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *