கவிதைகள்

உலக புத்தக தின வாழ்த்துக்கள்..

உலக புத்தக தினம் 23.4.2021

புத்தகம் கவிஞர் இரா .இரவி

மனிதனை மனிதனாக
வாழ வைப்பது
புத்தகம் !

மனிதனின் வளர்ச்சிக்கு
வித்திட்டது
புத்தகம் !

பண்பாடு வளர்த்து
பண்பைப் போதிப்பது
புத்தகம் !

அறிவியல் அறிவை
அகிலம் பரப்பியது
புத்தகம் !

பயனுள்ள கண்டுபிடிப்பு
வாழ்வின் பிடிப்பு
புத்தகம் !

புரட்சியாளனை
உருவாக்கியது
புத்தகம் !

அகிம்சைவாதியை
வளர்த்தது
புத்தகம் !

பகுத்தறிவுப் பகலவன்
ஒளிவீசக் காரணம்
புத்தகம் !

பேரறிஞர்
புகழ்ப் பெறக் காரணம்
புத்தகம் !

அகமும் புறமும்
சுத்தம் செய்வது
புத்தகம் !

அகம்பாவம் ஆணவம்
அகற்றுவது
புத்தகம் !

பணிவு கனிவு தெளிவு
வழங்குவது
புத்தகம் !

அறிவை விரிவு செய்து
அறியாமையை அகற்றுவது
புத்தகம் !

உயிரற்றவைதான்
பலரை உயிர்ப்பிக்கும்
புத்தகம் !

புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !

அகம் புதிதாக உதவுவது புத்தகம் !
அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் !

அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !
அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் !

ஆற்றல் பெருகிடக் காரணம் புத்தகம் !
அறிவு வளர்ந்திடக் காரணம் புத்தகம் !

இல்லம் நிறைந்திடத் தேவை புத்தகம் !
உள்ளம் புத்துணர்வுப் பெறப் புத்தகம் !

எடுத்த செயல் முடித்திடப் புத்தகம் !
ஏணியென உயர்த்துவது புத்தகம் !

மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம் !
மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம் !

மனதில் மாற்றம் தருவது புத்தகம் !
மனங்களைக் கொள்ளையடிப்பது புத்தகம் !

கொடிய கோபம் தணிக்க உதவும் புத்தகம் !
கொள்கைகள் அறிந்திட உதவும் புத்தகம் !

இலக்கிய ஈடுபாடு வளர்க்கும் புத்தகம் !
இலக்கியதாகம் தணிக்கும் புத்தகம் !

விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !
விஞ்ஞானிகள் வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !

நேர்முகத்தேர்வில் தேர்வாகக் காரணம் புத்தகம் !
நேரில் பார்க்காதவரையும் நேசிக்க வைக்கும் புத்தகம் !

மனக்கவலை நீக்கும் மருந்து புத்தகம் !
மனக்குறைப் போக்கும் காரணி புத்தகம் !

மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் !
மனிதனைக் கண்டுபிடித்துத் தந்தது புத்தகம் !

குற்றவாளியையும் திருத்தி விடும் புத்தகம் !
குற்றங்களைக் களைந்து விடும் புத்தகம் !

நேரத்தை பயனுள்ளதாக்கும் புத்தகம் !
நேர நிர்வாகம் கற்பிக்கும் புத்தகம் !

புத்தரைப் புரிய வைக்கும் புத்தகம் !
சித்தரைச் சிந்திக்க வைக்கும் புத்தகம் !

பெரியாரின் சிந்தனை உணர்த்தும் புத்தகம் !
பெரியோரை மதிக்க வைக்கும் புத்தகம் !

அண்ணாவை அறிய வைக்கும் புத்தகம் !
அறிவைத் தெளிய வைக்கும் புத்தகம் !

திருக்குறளை தெரிய வைக்கும் புத்தகம் !
திருவை வாழ்வில் வழங்கும் புத்தகம் !

வாழ்வியல் உணர்த்துவது புத்தகம் !
வசந்தம் வர வைக்கும் புத்தகம் !

சோதனைகளைச் சாதனைகளாக்கும் புத்தகம் !
வேதனைகளை நீக்கி விவேகம் தரும் புத்தகம் !

வெற்றிகளை நமது வசமாக்கும் புத்தகம் !
தோல்விகளைத் தவிர்த்திட உதவிடும் புத்தகம் !

பலர் புகழ் பெற்றிடக் காரண்ம் புத்தகம் !
பாமரனையும் பாருக்குக் காட்டுவது புத்தகம் !

படித்திட சுகம் தரும் புத்தகம் !
படித்திட சோகம் நீக்கும் புத்தகம் !

படிக்கப் படிக்க உயர்த்திடும் புத்தகம் !
படிக்கல்லாக இருந்து உயர்த்திடும் புத்தகம் !

இரண்டு கால் மிருகத்தை மனிதனாக்கியது புத்தகம் !
இன்னல் நீக்கி இன்பம் தரும் புத்தகம் !

காட்டு மிரண்டிகளை மனிதனாக்கியது புத்தகம் !
காட்டுவாசியையும் அறிஞனாக்கியது புத்தகம் !

கரக்கக் கரக்க பால் தருமாம் காமதேனு !
படிக்கப் படிக்க பரவசம் தரும் புத்தகம் !

இரைக்க இரைக்க தண்ணீர் சுரக்கும் கிணறு !
படிக்கப் படிக்க அறிவு சுரக்கும் புத்தகம் !

உணருங்கள் மிகவும் உன்னதமானது புத்தகம் !
உடலையும் உள்ளத்தையும் செம்மையாக்கும் புத்தகம் !

தினமும் சில மணி நேரம் படியுங்கள் புத்தகம் !
தவமாக வாசியுங்கள் தினமும் புத்தகம்!

நன்றி
கவிஞர் இரா.இரவி 

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top