கவிதைகள்வாழ்வியல்

குறும்பா.ஹைக்கூ. கவிஞர் இரா .இரவி !

குறும்பா.ஹைக்கூ. கவிஞர் இரா .இரவி !

தோரண மாவிலை
தோராயமாக பார்த்தது
மாங்காய் !

குளத்தில்
படகானது
உதிர்ந்த இலை !

உழுது உதவியது
உழவனுக்கு
மண் புழு !

மலர் மீது
வண்ண மலரா ?
ஓ வண்ணத்துப் பூச்சி !

ஆயிரம் தேனீக்களின்
வாழ்க்கையை முடித்து
ஒரு தீக்குச்சி !

சேற்றில் நட்ட நாற்று
கதிர்களாய் விளைந்து சிரித்தது
உவகையில் உழவன் !

அறுவடைக்குப் பின்னும்
தந்து உணவு பசுவுக்கு
பூமி !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

2 thoughts on “குறும்பா.ஹைக்கூ. கவிஞர் இரா .இரவி !

  • KUNASEKARAN a/l NADESEN

    பயனுள்ள தகவல்களைத் தாங்கிச் சிறப்பாகச் சுடர்விடுகிறது தமிழ் தீபம். வாழ்த்துகள்.

    Reply

Leave a Reply to அர்ஜுன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *