குறும்பா ஹைக்கூ
மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி !
தீயால் சுட்டபோதும்
வண்ணம் மாறவில்லை
வெண்சங்கு !
திக்காயம் பட்டபோதும்
நல்கியது இனிய இசை
புல்லாங்குழல் !
பயணத்தில்
வரிசை மாறவில்லை
எறும்பு !
சுமையை
சுமையாகக் கருதவில்லை
நண்டு !
பசித்தபோதும்
உண்ணவில்லை புல்
புலி !
ஏமாற்றிக் கரந்தபோதும்
பால் தந்தது
பசு !
உழுது உதவியது
உழவனுக்கு
மண் புழு !
அடித்தப்போதும்
குரைத்து உதவியது
நாய் !
வெட்டியப்போதும்
கறியானது
ஆடு !
வலையில் சிக்கியும்
உணவானது
மீன் !
நன்றி கவிஞர் இரா.இரவி

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982